சிபிஎஸ்சி பள்ளிகள் இறுதித் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த திட்டம் – கொரோனா பாதிப்பு எதிரொலி!!
இறுதி தேர்வுகள்:
அஹமதாபாத் நகரத்தில் உள்ள பல சிபிஎஸ்சி பள்ளிகள் கொரோனா பாதிப்புகள் நகரத்தில் அதிகரித்து வரும் காரணத்தால் தங்கள் பள்ளிகளில் தேர்வுகளை நடத்தும் முறை குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்டது. இதன் முடிவில், முன்னதாக ஆரம்ப மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வுகளை நேரடி முறையில் நடத்துவதாக இருந்த முடிவை மாற்றி அமைத்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தாக்கம் – மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சம்!!
பள்ளியின் முடிவு:
அஹமதாபாத் நகரில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வர், நாங்கள் பெற்றோரிடம் நேரடி தேர்வுகள் மற்றும் ஆன்லைன் தேர்வுகள் என்ற இரண்டு வாய்ப்புகளை கொடுத்து அவர்களின் கருத்துக்களை தெரிவிக்க கேட்டோம். இருப்பினும், மாதிரி தேர்வுகளை நேரடி முறையில் நடத்த திட்டமிட்டு மாணவர்களுக்கான பயண ஏற்பாடுகளையும் இலவசமாக அமைக்க உள்ளோம்.
இதில், 40% மாணவர்கள் நேரடி தேர்வு முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை நேரடி முறையில் நடத்த பள்ளிகள் திட்டமிட்டுள்ளது. ஆரம்ப நிலை பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் முறை தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும், சில பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு வாய்மொழித் தேர்வுகளை நடத்த உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்