2021 ஜேஇஇ (மெயின்) தேர்வு மையங்கள் அதிகரிப்பு – தேசிய தேர்வு மையம் அறிவிப்பு!!
தேசிய தேர்வு ஆணையம் 2021ம் ஆண்டுக்கான ஜேஇஇ (மெயின்) தேர்வின் மார்ச் முதல் மே மாதம் வரையிலான தேர்வுகளுக்கு தேர்வு மையங்களை அதிகரித்துள்ளதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஜேஇஇ (மெயின்) தேர்வு:
மத்திய அரசின் உயர்நிலை பல்கலை பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு மத்திய அரசால் நடத்தப்படுவது தான் ஜேஇஇ தேர்வாகும். ஆண்டுதோறும் இதன் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர்கள் மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள். வழக்கமாக ஆண்டிற்கு இரண்டு முறை நடக்கும் இந்த தேர்வானது நடப்பு ஆண்டில் இருந்து நான்கு முறை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை – மாநில அரசு அறிவிப்பு!!
நான்கு கட்ட தேர்வுகள்:
முதல் கட்ட தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட தேர்வுகள் மார்ச் 15 முதல் 18 வரையிலும், ஏப்ரல் 27 முதல் 30 வரையிலும், மே 24 முதல் 28 வரையிலும் என்று நான்கு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதல் ஷிப்ட் தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். இரண்டாவது ஷிப்ட் மதியம் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் ஒரு முறையில் இருந்து நான்கு முறை வரை தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வில் மாணவர் எடுத்துள்ள அதிகபட்ச மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
தேர்வு மையங்கள்:
முதல் கட்ட தேர்வின் முடிவில் பல மாணவர்களின் வேண்டுகோளின் படி, கொரோனா தொற்றினால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை முன்னிட்டு கூடுதலாக மூன்று தேர்வு மையங்களை அதிகரித்துள்ளது தேசிய தேர்வு முகமை. அதில், ஒரு தேர்வு மையத்தை இந்தியாவின் கார்கில் லடாக் பகுதியிலும், இரண்டு மையங்களை இந்தியாவிற்கு வெளியில் கோலாலம்பூர், மலேசியாவில் மற்றும் நைஜீரியாவில் அபுஜா / லாகோஸ் பகுதியிலும் அமைத்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்