10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை – மாநில அரசு அறிவிப்பு!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட் – 19 பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையிலும், 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை நடத்த இருக்கும் தேதிகளை மாற்றியமைக்க முடியாது என்று மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று:
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா நோய்த்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் மிகவும் பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் செயல்பட்டு கொண்டு தான் உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு ஆரம்ப நிலையிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் உச்சத்தில் இருந்தது.
12ம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி – ஆம்பூரில் அதிர்ச்சி!!
பொதுத்தேர்வுகள்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 29ம் தேதி முதல் தொடங்கி மே 20ம் தேதி முடிவடைய உள்ளது. மேலும், 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 23ம் தேதி முதல் தொடங்கி மே 21ம் தேதி வரை நடக்க இருக்கிறது. மகாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் அவர்கள், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு அட்டவணையில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார். மாணவர்களின் நலன் மீது எங்களுக்கு அக்கறை இருக்கிறது. ஆனால் அதற்காக அவர்களின் ஒரு வருட கல்வி ஆண்டை நாங்கள் வீணாக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
தேர்வு முறை:
வழக்கமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டு சற்று தாமதமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் கலந்து கொள்கின்றனர். தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் பொதுத்தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்த பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தேர்வுகள் கண்டிப்பாக நேரடி எழுத்து முறையில் தான் நடத்தப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்