TNPSC குரூப் 4 தேர்வு விடைத்தாளை வழங்கக்கோரிய வழக்கு – நீதிமன்றம் உத்தரவு!

0
TNPSC குரூப் 4 தேர்வு விடைத்தாளை வழங்கக்கோரிய வழக்கு - நீதிமன்றம் உத்தரவு!
TNPSC குரூப் 4 தேர்வு விடைத்தாளை வழங்கக்கோரிய வழக்கு - நீதிமன்றம் உத்தரவு!
TNPSC குரூப் 4 தேர்வு விடைத்தாளை வழங்கக்கோரிய வழக்கு – நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு குறித்து பல சர்ச்சைகள் வரும் நிலையில் விடைத்தாளை வழங்கக்கோரிய வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த தேர்வு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் பின் கடந்த மார்ச் மாதம் முடிவுகள் வெளியானது முதல் பல சர்ச்சைகள் வந்த நிலையில், மதிப்பெண்ணில் குளறுபடி இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆதார் அங்கீகார பரிவர்த்தனை 2.31 மில்லியனாக அதிகரிப்பு – வெளியான புள்ளி விவரங்கள்!

அதில் குரூப் 4 தேர்வில் எனக்கு 121.50 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. இந்த தேர்வின் ஓ.எம்.ஆர். விடைத்தாள் மதிப்பீட்டில் தவறு நடந்து இருப்பதாகவும், மேலும் விடைத்தாளை ஸ்கேனிங் செய்து, மதிப்பீடு செய்ததில் தவறு நடந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஓ.எம்.ஆர். விடைத்தாளை வழங்க வேண்டும் எனவும், அந்த பணிகளில் எனக்கு ஒரு இடத்தை காலியாக வைக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் குரூப்-4 பணி நியமன நடைமுறைகள் முடிவடையும் நிலையில் இருப்பதால் அந்த நடைமுறைகள் முடிவடைந்ததும் விடைத்தாள் நகலை வழங்க வேண்டும் என TNPSCக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!