ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களையும் விற்க முடிவு – மே 10 முதல் அமல்!

0
ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களையும் விற்க முடிவு - மே 10 முதல் அமல்!
ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களையும் விற்க முடிவு - மே 10 முதல் அமல்!
ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களையும் விற்க முடிவு – மே 10 முதல் அமல்!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மே பத்தாம் தேதி முதல் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள்

தமிழகத்தில் உள்ள 34,792 ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் ஆகிய அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களின் வசதிக்காக அவ்வப்போது ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் கூடுதலாக சில பொருட்களையும் விற்க தமிழக அரசு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆதார் அங்கீகார பரிவர்த்தனை 2.31 மில்லியனாக அதிகரிப்பு – வெளியான புள்ளி விவரங்கள்!

அதாவது, தமிழகத்தில் தற்போது மட்டுமே கூட்டுறவு பண்டகசாலைகள் மூலமாக கிட்டத்தட்ட 1,254 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த வருமானத்தை பெருக்குவதற்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் ஆவின் பொருட்களையும் ரேஷன் கடையில் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்கப்படுவதற்கான இந்த திட்டம் வரும் மே பத்தாம் தேதியிலிருந்து அனைத்து மாவட்டத்திலும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ரேஷன் கடைகளின் வாயிலாக யுபிஐ சேவைகளை பயன்படுத்தி எளிமையான முறையில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!