ஓய்வூதியம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு அனுமதி – அமைச்சரவை ஒப்புதல்!
ஆந்திர பிரதேசத்தில் நேற்று மாநில முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம்:
ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆரோக்கிய ஸ்ரீ சுகாதார திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கான தொகையை ரூ. 25 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நலத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகையை ரூ. 2,750-ல் இருந்து 3000 ஆக உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தில் 10 + மாவட்டங்களில் கனமழை – வானிலை அறிக்கை!
அதனை தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் இருந்து 77 கிலோ மீட்டர் தொலைவில் நெட்வொர்க்குடன் நான்கு வழி மெட்ரோ வழிதடங்களை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக காக்கிநாடா, விஜயவாடா, நெல்லூர், திருப்பதி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை பிரிவுகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.