
2050 ஆண்டில் பெரும் ஆபத்து காத்து கொண்டிருக்கிறது..!! ” மழை, வெயில் தான் காரணமா…GCEW எச்சரிக்கை “..!!
இந்தியாவில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக வெயிலும்,மழையும் காலங்கள் மாறி மாறி வருவதால், மக்களை எதிர்பாராத நோய்கள் தாக்கி வருகிறது. மேலும், இந்த மாற்றத்தின் காரணத்தால் பல்வேறு இயற்கை சீற்றங்களும் பூமியில் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், உலகளாவிய நீர் பொருளாதார ஆணையம் (GCEW) ஆனது தற்போது இது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கன்னா?? வெளியான முக்கிய தகவல்!!
அதாவது, “பருவநிலை மாற்றத்தால் தவறி பெய்யும் மழை மற்றும் வெயில் காரணமாக, வரும் 2050ம் ஆண்டில் நீரின் மொத்த சேமிப்பு குறைந்து, உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது” என்று GCEW ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ” உலகளாவிய நாடுகளில் அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கு, உள்நாட்டு உற்பத்தியில் 8% வரை நீர் பற்றாக்குறையினால் பாதிப்பு ஏற்படலாம் என்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியில் 5% வரை பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும், உலக நாடுகள் அனைத்தும் நீரின் தேவையை அறிந்து, இதை உலகளாவிய பிரச்சனையாக கருதி முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.























