தமிழக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் தட்டுப்பாடு?? அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!!
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ரேஷன் கார்டு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக ரேஷன் கடைகளில் போதுமான அளவு அத்தியாவசிய பொருட்களின் கொள்முதல் இல்லதால் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தற்போது ரேஷன் பொருட்கள் தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ‘அக்டோபர் மாதத் துவரம் பருப்பு ஒதுக்கீடான 20751 மெட்ரிக் டன்னில் அக்.15-ம் தேதி வரை 9461 மெட்ரிக் டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது’. ‘2.04 கோடி பாமாயில் பாக்கெட்கள் ஒதுக்கீட்டில் 97.83 லட்சம் பாக்கெட்கள் விநியோகப்பட்டுவிட்டன’.’மீதமுள்ளவை விரைவாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன’. ‘ஆதலால் தீபாவளிக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.
























