தமிழக விவசாயிகளுக்கு 100% மானியத்துடன் ஆழ்துளை கிணறு – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்துடன் ஆழ்துளை கிணறு அமைத்து தர இருப்பதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறு:
தமிழகத்தில் பாசன நீர் ஆதாரத்தின் மூலமாக நல்ல வசூலை விவசாயிகள் பெற வேண்டும் என்கிற நோக்கில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்துடன் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான நீர் பாசன வசதியும் அமைத்துக் கொடுக்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.81,100/- ஊதியம்!
மேலும், தமிழகத்தில் தற்போது விவசாயிகளுக்கு ஆள்துளை கிணறு அமைக்கும் திட்டத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்டம் நிர்வாகி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ஆழ்துளை கிணறு வசதியை மின்மோட்டார் உதவியுடன் அமைத்து தருவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
Telegram Updates for Latest Jobs & News – Join Now
சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் வருவாய்த் துறையின் மூலமாக வழங்கப்பட்ட சாதி சான்றிதழ் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் மூலமாக பயன்பெறுவதற்கு விவசாயிகள் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தினை நேரில் சென்று அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.