டிஜிட்டல் மயமாகும் சிறைச்சாலை – பயோமெட்ரிக் சேவை அறிமுகம்!
தமிழக அரசு அலுவலகங்களில் தற்போது பயோமெட்ரிக் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது சிறை சாலையிலும் பயோமெட்ரிக் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக்:
தமிழக சிறைச்சாலைகளில் உள்ள கேண்டீன்களில் கைதிகளுக்கு தேவைப்படும் சோப்பு, பேஸ்ட், பிரஸ், டீ காபி, உள்ளிட்ட உணவு பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கேண்டீன்களில் கைதிகள் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேண்டீன்களில் அதிக விலைக்கு பொருள்களை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தமிழக கல்லூரிகளில் கணிதப் பாடப்பிரிவு நீக்கம் – கல்வி நிர்வாகம் முடிவு!
இதற்கு தீர்வு காணும் வகையிலும் சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பயோமெட்ரிக் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சிறைத்துறை டிஜிபி கேண்டீன்களில் பயோமெட்ரிக் வசதியை தொடங்கி வைத்துள்ளார். இதன் வாயிலாக கைதிகள் கேண்டீன்களில் என்ன வாங்குகிறார்கள். அதற்கு அவர்கள் செலவிடும் தொகை உள்ளிட்ட விவரங்களை அறிய முடியும்.