மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஊதியம் நிர்ணயத்திற்கான காலம் நீட்டிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை நிர்ணயம் செய்வதற்கான விருப்பத்தை மத்திய அரசு அடுத்த மூன்று மாதங்கள் வரைக்கும் வழங்கியுள்ளது.
ஊதிய நிர்ணயம்:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதிய குழு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ஏழாவது ஊதியக்குழுவின் அடிப்படையில் அதற்கான பலன்களை பெற்று வருகின்றனர். மேலும் ஜனவரி 1, 2024 ஆம் ஆண்டு முதல் எட்டாவது ஊதிய குழுவை அரசு நிறுவ வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
Join Our WhatsApp Group” for Latest Updates
மத்திய அரசு ஊழியர்கள் ஊதியத்தை நிர்ணயம் செய்வதற்கான வாய்ப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் ஊதியம் நிர்ணயம் செய்வதற்கான விருப்பத்தை பயன்படுத்த தகுதியுள்ள ஊழியர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதாவது, அடுத்த மூன்று மாதங்கள் வரைக்கும் மத்திய அரசு ஊழியர்கள் ஊதியம் நிர்ணயம் செய்வதற்கான விருப்பத்தை பயன்படுத்தலாம்.
டிஜிட்டல் மயமாகும் சிறைச்சாலை – பயோமெட்ரிக் சேவை அறிமுகம்!
மூன்று மாதங்களுக்குப் பிறகு எக்காரணம் கொண்டும் தேதி நீடிப்பு செய்யப்படாது எனவும், நிபந்தனையின் தளர்வுக்கான எந்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.