தமிழக கல்லூரிகளில் கணிதப் பாடப்பிரிவு நீக்கம் – கல்வி நிர்வாகம் முடிவு!
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணித பாடப்பிரிவு போதுமான வரவேற்பு பெறாத நிலையில் கணிதப் பாடப்பிரிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
கணிதப் பாடப்பிரிவு
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் வரவேற்பு பெறாத மற்றும் குறைவான மாணவர் சேர்க்கையுள்ள பாடப்பிரிவுகள் நீக்கம் செய்யப்பட்டு தேவையான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் குறைவான மாணவர் சேர்க்கை மற்றும் வரவேற்பு பெறாத பாடப்பிரிவு குறித்த விவரங்களை கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளது.
TNTRB BEO தேர்வுக்கு தயாராகும் நபரா நீங்கள்? – இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!
மேலும், பரமக்குடி அரசு மகளிர் கல்லூரியில் கணித பாடப்பிரிவு நீக்கப்பட்டு பொருளியல் பாடப்பிரிவும், மொடக்குறிச்சி கல்லூரியில் இயற்பியல் பாடப்பிரிவு நீக்கப்பட்டு விலங்கியல் பாடப் பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதே போல பல்வேறு கல்லூரிகளில் வரவேற்பு பெறாத பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டு தேவையான பாடத்திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தமாக 12 அரசு கல்லூரிகளில் நீக்கம் செய்யப்பட்ட பாடப்பிரிவுகளில் கணித பாடப் பிரிவு 9 கல்லூரிகளில் நீக்கப்பட்டுள்ளதாகவும், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவு ஒரு சில கல்லூரிகளில் நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சில வருடங்களுக்கு முன்னர் அதிக அளவில் வரவேற்பு பெற்ற பாடத்திட்டங்களுக்கு தற்போது வரவேற்பு இல்லாமல் மொத்தமாகவே பாடப்பிரிவை நீக்கம் செய்யப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.