சிபியிடம் வாக்குவாதம் செய்யும் அபிஷேக் ராஜா – வெளியான “பிக்பாஸ் சீசன் 5” 3வது ப்ரோமோ!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் நாமினேட் செய்யப்பட்டவர்கள் காப்பாற்ற புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது நாளான இன்று புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் விலைமதிக்க முடியாத நாணயங்கள் வைக்கப்பட்டு பிக்பாஸ் வீடு அருங்காட்சியமாக மாற்றப்படும். அந்த நாணயத்தை பாதுகாக்க ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கும் மேலும் அதை திருடவும் ஒரு சிலர் இருப்பார்கள். இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதில் ஒரு சிலர் அதை யாருக்கும் தெரியாமல் எடுத்திருக்கின்றனர்.
அதே போல நாமினேஷனில் இருந்து யாரை காப்பாற்ற போறீர்கள் என அண்ணாச்சி அனைவரிடமும் கேட்க பெரும்பான்மையானோர் தாமரை பெயரை சொல்கின்றனர். உடனே அண்ணாச்சி பிரியங்காவிடம் கேட்க அவரும் தாமரை பெயரை சொல்கிறார். இந்நிலையில் இந்த விளையாட்டு குறித்து புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அபிஷேக் சிபியிடம் வாக்குவாதம் செய்கிறார். சொன்னது ஒரு போல செய்வது ஒரு மாதிரி இருக்கிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கயல், கண்ணன் இணைந்து வெளியிட்ட கியூட் வீடியோ – குவியும் லைக்குகள்!
அதை நான் கண்காணிக்க வேற வேண்டுமா என்ன சிபி சத்தம் போட இது ஒரு மைண்ட் கேம் அப்படி தான் விளையாட முடியும் என அபிஷேக் சொல்கிறார். அப்போ என்ன நடக்கிறது என தெரியாமல் கண்காணிக்கும் நான் என்ன லூசா என சிபி கேட்க, இந்த கேமில் எமோஷனல் எதுவும் இல்லை என அபிஷேக் சத்தமாக பேசுகிறார். இதன் மூலம் மற்ற போட்டியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் அபிஷேக்கின் உண்மையான முகம் தற்போது தான் தெரிகிறது.