விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் நமீதா மாரிமுத்து? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து மீண்டுமாக பிக்பாஸ் வீட்டுக்குள் வர வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நமீதா மாரிமுத்து
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் வரலாற்றில் முதன் முறையாக ஒரு திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்டது தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் தான். பெருமளவு சமுதாயத்தால் ஒதுக்கப்படும் மூன்றாம் பாலின சமூகத்தை சேர்ந்த திருநங்கை நமீதா மாரிமுத்து தமிழ் திரையுலகில் ஒரு மாடலாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பல்வேறு கட்ட போராட்டங்கள், அவமானங்கள், கண்ணீர்களை கடந்து ஒரு முன் உதாரணமாக இருந்து வரும் நமீதா மாரிமுத்து ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கயல், கண்ணன் இணைந்து வெளியிட்ட கியூட் வீடியோ – குவியும் லைக்குகள்!
அந்த வகையில் இந்த சீசனின் ஆரம்ப கட்டத்தில் இருந்தே திருநங்கை நமீதா மாரிமுத்துக்கு ரசிகர்கள் தங்களது ஏக ஆதரவுகளை கொடுத்து வந்தனர். இதனுடன் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் அவர் வெற்றிபெறுவார் என்பதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. ஆனால் ரசிகர்களின் எண்ணம் பொய்த்து போகும் விதமாக நிகழ்ச்சி துவங்கிய முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்து திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவரது உடல்நிலையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது.
ஜீ தமிழின் பிரபல சீரியல்கள் திடீர் நிறுத்தம் – இது தான் உண்மையான காரணமாம்!
இதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு சாலையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கி மக்களின் கவனம் ஈர்த்திருக்கிறார் நமீதா மாரிமுத்து. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘கடந்து வந்த பாதை’ டாஸ்கில் நமீதா மாரிமுத்து கூறிய சில கருத்துக்களை வைத்து உருவாக்கப்பட்ட எடிட்டுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை காணும் ரசிகர்கள் நமீதா மாரிமுத்து மீண்டுமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று கமெண்ட் பக்கத்தில் தங்களது கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.