கோபத்தில் வெண்பாவை துப்பாக்கியால் சுடும் சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் காட்சிகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் சௌந்தர்யா, வெண்பா மீது மிகுந்த கோபம் அடைந்து துப்பாக்கி வைத்து சுட்டு விடுவாராம்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல்
விஜய் டிவியில் தற்போது பல வித ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியல். இந்த சீரியலில் தற்போது வெண்பா கண்ணம்மாவை பாரதியிடம் இருந்து டிவோர்ஸ் வாங்க வேண்டும் என்று மிரட்டுகிறார். இதனால் கண்ணம்மா தனது குழந்தையை யோசித்து சரி என்று கூறி விடுகிறார். இப்படியாக இருக்க, அடுத்து இந்த சீரியலில் முக்கிய திருப்பமாக சௌந்தர்யா கண்ணம்மாவிடம் அவரை யார் மிரட்டுகிறார் என்று கேட்கிறார். அதற்கு கண்ணம்மா தனக்கும் வெண்பாவிற்கும் நடந்த உரையாடலை கூறி தன்னை வெண்பா மிரட்டுவதாக கூறி விடுகிறார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்கள் – அதிகாரபூர்வ பட்டியல் ரிலீஸ்!
இதனை கேட்டு சௌந்தர்யா கொந்தளித்து விட்டு வெண்பா இப்படி எல்லாம் செய்கிறாளா? என்று நினைத்து கொண்டு கடுப்பாகிறார். கண்ணம்மாவை வெண்பா மிரட்டியதால் தனது மகனையும், மருமகளையும் சேர விடாமல் செய்வது வெண்பா தான் அதனால் அவளை எதாவது செய்ய வேண்டும் என்று தன்னிடம் இருக்கும் துப்பாக்கி வைத்து அவரை சுடுவதற்காக அவரது வீட்டிற்கு செல்லுகிறார்.
நடிகை சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து – நாக அர்ஜுனாவின் வைரல் பதிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!
நேராக வெண்பா வீட்டிற்கு செல்லும் சௌந்தர்யா அவரிடம் சண்டை போடுகிறார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முத்தி போய் சௌந்தர்யா வெண்பாவை சுடுகிறார். அப்போது சரியாக கண்ணம்மா போலீசாரை அழைத்து கொண்டு வெண்பாவின் வீட்டிற்கு செல்லுகிறார். இந்த திடீர் திருப்பம் தான் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.