பாரதி பற்றிய உண்மையை லட்சுமியிடம் சொல்லப்போகும் கண்ணம்மா – சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்!
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா மற்றும் பாரதியை பற்றிய உண்மை எப்போது தெரிய வரும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இந்த வாரத்தில் அடுத்து வரும் எபிசோடுகளில் இதற்கான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா தொடர் ஆரம்பம் முதல் ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. ஆனால் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து ரேட்டிங் நிலவரத்தில் சற்று பின்னடைவை பாரதி கண்ணம்மா சந்தித்தது. இதனால் சீரியலில் வரிசையாக பல திருப்பங்களையும் அடுத்தடுத்து கொண்டு வருகிறார்கள். இதனால் ரேட்டிங் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது.
கடந்த வாரத்தில் கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வது போல் பேசி, மேலும் நோகடித்த பாரதி மீண்டும் வெண்பாவின் பேச்சை கேட்க ஆரம்பித்து விட்டான். கண்ணம்மாவை சமாதானப்படுத்த வரும் சௌந்தர்யாவை திட்டி அனுப்பி விடுகிறாள் கண்ணம்மா. இந்நிலையில், ஆட்டோ குமாரின் தங்கைக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. அப்போது கண்ணம்மா மாப்பிளை வீட்டாரிடம் செய்முறை பற்றி பேச, குடும்பத்தோட வாழ்கிற பொண்ணுங்க தான் நல்ல காரியத்துல முன்னாடி நிக்கணும், நீ ஏன் பேசுற என்று அவர்கள் கண்ணம்மாவை கேட்க, அதற்கு லட்சுமி எங்க அம்மாவை இப்படி பேசாதீங்க என்று சொல்கிறாள்.
உடனே, உங்க அம்மா ஒழுங்கா இருந்த உங்க அப்பா ஏன் விட்டுட்டு போறாரு என்று கேட்கிறார்கள்.அதற்கு கண்ணம்மா இன்னும் 4 நாளில் தனது பிறந்தநாளில் லக்ஷ்மியின் அப்பா பற்றி சொல்லப் போவதாக சொல்கிறாள். நீ யார் கூட வாழ்ந்த எங்களுக்கு என்ன என்று மாப்பிளை வீட்டார் கிளம்பி விட்டனர். இதற்கு லட்சுமி அப்பா வரப்போறாரா அம்மா என்று கேட்க அதற்கு கண்ணம்மா ஆமாம் என்று பதில் அளிக்கிறாள். இதனால் இத்தனை நாட்களாக வெளிவராத உண்மை இனி வெளிவரப்போவதாக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.