வீட்டிற்கு வந்த தாத்தா, அவரை உற்சாகப்படுத்த குடும்பத்தினர் செய்யும் முயற்சி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா தாத்தாவை நினைத்து வருத்தப்படுகிறார். பின் கோபி அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார். பின் தாத்தா வீட்டிற்கு வந்த நிலைமையை பார்த்து ஈஸ்வரி அழுகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், தாத்தாவை செழியன் எழில் சந்தோசமாக வைத்துக் கொள்ள நினைக்கிறார். எழில் தாத்தாவிற்கு பிடித்த இளையராஜா பாடலை போட்டு தூங்க வைக்கிறார். அப்போது செழியன் தாத்தாவிடம் சந்தோசமாக இருந்ததை நினைத்து பார்க்கிறார். பொங்கல் பண்டிகை, கல்யாணத்தில் ஆசிர்வாதம் செய்தது அனைத்தையும் நினைத்து பார்த்து வருத்தப்படுகிறார். எழில் தாத்தா உடற்பயிற்சி செய்ய சொல்லி கொடுத்ததை நினைத்து பார்க்கிறார். பின் இனியா தனியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறார்.
TN Job “FB Group” Join Now
பின் கோபி ரூமிற்கு செல்ல என்னாச்சு என கோபி கேட்கிறார். தாத்தாவிற்கு எல்லாம் சரியாகிவிடும் தான அவர் நல்லபடியாக வந்துவிடுவாரா என கேட்க, கோபி எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். ஈஸ்வரி தாத்தாவை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க இனியா வந்து ஆறுதல் சொல்கிறார். தாத்தாவை பாக்கியா, செழியன், எழில் ஆகியோர் அழைத்துக் கொண்டு வர அவர் நடக்க முடியாமல் வந்து கொண்டே இருக்கிறார். அப்போது ஈஸ்வரி அதை பார்த்து வருத்தப்பட்டு அழுகிறார். கோபி அவர் முன்னாள் போனாலே தாத்தா கோபப்படுகிறார்.
அதனால் கோபி போகாமல் இருக்கிறார். பின் தாத்தாவை படுக்க வைக்க தாத்தாவின் நிலைமையை பார்த்து குடும்பத்தினர் வருத்தப்படுகின்றனர். அப்போது கோபி அப்பா என கூப்பிட ராமமூர்த்தி மீண்டும் கோபப்படுகிறார். பின் கோபி வருத்தப்பட்டு சென்று விடுகிறார். பாக்கியா தாத்தாவிற்கு தேவையான எல்லாத்தையும் செய்ய, ஈஸ்வரி அவரை பார்த்து வருத்தப்பட்டு இருக்கிறார். ஜெனி வந்து தாத்தாவிடம் சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார். தாத்தா அதை நினைத்து சிரிக்கிறார். ஈஸ்வரி அதை பார்த்து சந்தோசப்படுகிறார்.
செல்வி வந்து தாத்தாவை பார்த்து எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். உங்களுக்கு நன்றாகிவிடும் நான் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று பூஜை செய்தேன் என சொல்கிறார். பின் தாத்தா முன்னாள் அனைவரும் விளையாடி அவரை சந்தோசமாக வைத்துக் கொள்கின்றனர். அனைவரும் சந்தோசமாக பேசி விளையாட அவர்களை பார்த்து ராமமூர்த்தி சந்தோசப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.