8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பிப்.3 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு!
மேற்கு வங்கத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்களும் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் தொடக்க பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு:
இந்தியாவில் கொரோனா மற்றும் அதன் மறு உருவமான ஓமைக்ரான் தொற்றும் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், டெல்லி, உத்தரபிரதேசம், மணிப்பூர், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. அதனால் தற்போது பல்வேறு மாநிலங்களில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அமல்படுத்தி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சமீபத்தில் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா 3 ஆம் அலை காரணமாக மீண்டும் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுத்தேர்வு இல்லாத 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது மேற்கு வங்கத்தில் அனைத்து பள்ளிகளில் பயிலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதையடுத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் வியாழக்கிழமை முதல் ஆஃப்லைன் வகுப்புகளை மீண்டும் தொடங்கும் என்று முதல்வர் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உணவகங்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் 75% திறனில் செயல்படும் என்றும் பூங்காக்கள் மற்றும் சுற்றுலா இடங்களும் கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்படும் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மேலும் இத்தகைய வைரஸ் பரவலை தடுக்க அம்மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.