இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் 2வது வெற்றி – பட்டியலில் மாற்றமா?
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேச அணி இலங்கையை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
உலகக்கோப்பை:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 38வது லீக் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இலங்கை மற்றும் வங்கதேச அணியினர் மோதிக்கொண்டனர். இதில் டாஸ் வென்ற வங்கதேச அணியினர் பந்து வீச்சை தேர்வு செய்தனர். இதனால், முதலில் களமிறங்கிய இலங்கை அணியினர் 49.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 279 ரன்களை பெற்றனர். இதனால், வங்கதேச அணியினருக்கு வெற்றி இலக்காக 280 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
Follow our Twitter Page for More Latest News Updates
இதன் பின்னர், களமிறங்கிய வங்கதேச அணியினர் 41.1 ஓவர்களிலேயே ஏழு விக்கெட் இழப்பில் 282 ரன்களை பெற்று இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளனர். இதனால் இலங்கையுடனான உலகக் கோப்பை தொடரில் மூன்று விக்கெட் இழப்பில் வங்கதேச அணி இன்று புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இனி வரும் லீக் போட்டிகளில் வங்கதேச அணி வெற்றி பெற்றாலும் அரை இறுதிக்கு முன்னேறி செல்ல வாய்ப்பில்லை.