நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகைக்கு வளைகாப்பு – குவியும் வாழ்த்துக்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற தொடரின் மூலமாக பிரபலமான ரஷ்மிகாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது இவருக்கு குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தும் படியாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாம் இருவர் நமக்கு இருவர்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த சீரியல்களின் மூலமாகவே சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ரசிகர்களின் மத்தியில் கூடிய சீக்கிரமே இடம் பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்ததன் மூலமாக ரஷ்மிகா ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து வருகிறார்.
Exams Daily Mobile App Download
அதாவது நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் ரஷ்மிகா தாமரை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், கொரோனா தொற்றின் காரணமாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்கு பின்பு வேறு ஒரு கதை களத்தில் அதே நாம் இருவர் நமக்கு இருவர் என்ற பெயரில் தொடர் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. நாம் இருவர் நமக்கு இருவர் தொடருக்குப் பிறகு ரஷ்மிகாவிற்கு ஜெயராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் அனைத்தையும் ரஷ்மிகா சமூக வலை பக்கங்களில் வெளியிட்டிருந்தார். திருமணத்திற்கு பிறகு ரஷ்மிகா ராஜபார்வை தொடரின் நாயகியாக நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். இதற்கு பிறகு இந்த சீரியலை முடித்த பிறகு ரஷ்மிகா கர்ப்பமாகியுள்ளார். கர்ப்பமாக இருந்த போதும் அவ்வப்போது பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டபடி இருந்தார். தற்போது உறவினர்கள் அனைவரும் சேர்ந்து இவருக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர். மேலும், இந்த வளைகாப்பில் சீரியல் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். வளைகாப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.