மூர்த்தி கடன் வாங்கியதை நினைத்து வருத்தப்படும் கதிர், ஆறுதல் சொல்லும் அண்ணன் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த எபிசோட்!

0
மூர்த்தி கடன் வாங்கியதை நினைத்து வருத்தப்படும் கதிர், ஆறுதல் சொல்லும் அண்ணன் -
மூர்த்தி கடன் வாங்கியதை நினைத்து வருத்தப்படும் கதிர், ஆறுதல் சொல்லும் அண்ணன் - "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் அடுத்த எபிசோட்!
மூர்த்தி கடன் வாங்கியதை நினைத்து வருத்தப்படும் கதிர், ஆறுதல் சொல்லும் அண்ணன் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு டிரீட்மென்ட் நடந்துவிட்டது என கதிர் ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் ஒரு பக்கம் பணம் கொடுத்ததால் குடும்பத்தில் ஒவ்வொருத்தரும் பேசுவதை பார்த்து கதிர் வருத்தப்படுகிறார். இந்நிலையில் மூர்த்தி கதிரை சமாதானம் செய்வது எல்லாம் அடுத்து வரப்போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குழந்தை இல்லாமல் முல்லையும் கதிரும் கவலைப்பட மூர்த்தி முல்லை படும் கஷ்டத்தை பார்த்து எப்படியாவது டிரீட்மென்ட் எடுக்க வேண்டும் என நினைக்கிறார். தெரிந்தவர்களிடம் பணம் கேட்க ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை. அதனால் வட்டிக்கு பணம் வாங்குகிறார். அந்த விஷயம் கதிருக்கு தெரிய வேண்டாம் என நினைக்கிறார். இந்நிலையில் முல்லையை பார்க்க வந்த மீனாவின் அப்பாவும், தனத்தின் அம்மாவும் பணம் கொடுத்ததை நினைத்து சுயநலமாக பேசுகின்றனர்.

கணவர் கொடுமையால் மருத்துவமனைக்கு வந்த பெண், நியாயம் கேட்ட பாரதி & கண்ணம்மா – சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

அதை எல்லாம் கதிர் கேட்டு வருத்தப்பட்டாலும் முல்லை சந்தோசம் தான் முக்கியம் என்பதால் அவரை அரவணைத்து பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் கடையில் கதிர் பணத்தை கேட்க முல்லை டிரீட்மென்டிற்கு எல்லாத்தையும் கொடுத்துவிட்டதாக ஜீவா சொல்கிறார். அதை நினைத்து கதிர் வருத்தப்பட ஜீவாவும், மூர்த்தியும் கதிருக்கு ஆறுதலாக பேசுகின்றனர். இந்த குடும்பத்திற்கு ஒன்று என்றால் நீ எவ்வளவு கஷ்டப்படுகிறாய் இதெல்லாம் பெரிதாக இல்லை என சொல்கிறார்

Exams Daily Mobile App Download

இந்நிலையில் கடன் கொடுத்த மூர்த்தியிடம் வந்து இன்னும் ஒரு வாரத்தில் பணம் கொடுக்க வேண்டும் என சொல்ல மூர்த்தி சரி என சொல்கிறார். அப்போது தான் கதிருக்கு உண்மை தெரிய வருகிறது. அதனால் கதிர் மிகவும் வருத்தப்படுகிறார். அவர் மோசமானவர் அவரிடம் ஏன் பணம் வாங்குனீங்க என கேட்க மூர்த்தி அவசரத்திற்கு வாங்கியதாக சொல்கிறார். இனி வரும் எபிசோடுகளில் மூர்த்தி பணத்தை திருப்பி கொடுப்பாரா என விறுவிறுப்பாக கதை நகர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!