பாக்கியாவை திருமணம் செய்யும் பழனிசாமி.. நடக்க போவது என்ன? “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா பழனிசாமியுடன் நட்பாக பழக அது குடும்ப நட்பாக மாறுகிறது. பழனியிடம் ஈஸ்வரி பாக்கியா பட்ட கஷ்டங்களை சொல்ல, அதனால் அவர் பாக்கியாவை திருமணம் செய்ய நினைக்கிறார்.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா படிக்க சென்ற இடத்தில் பழனிசாமியுடன் நட்பாக பழகுகிறார். மேலும் பாக்கியா வீட்டிற்கு பழனியும், பழனி வீட்டிற்கு பாக்கியாவும் செல்கிறார்கள். இதில் பழனி, பாக்கியா வீட்டிற்கு வர ஈஸ்வரியும், ராமமூர்த்தியும் அவருடைய அம்மா பற்றி நலம் விசாரிக்கிறார்கள். அந்த நேரம் கோபி வீட்டிற்கு வர, பழனியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பழனி அது பாக்கியாவின் கணவர் என தெரியாமல் பேசிவிட, பின் கணவர் என தெரிந்து மன்னிப்பு கேட்கிறார்.
இந்நிலையில் பாக்கியாவின் நிலைமையை நினைத்து பழனிச்சாமி ஈஸ்வரியிடம் வருத்தப்படுகிறார். உடனே ராமமூர்த்தி, பாக்கியா என்னுடைய நண்பரின் மகள், என் நண்பன் மறைவிற்கு பின் அவனுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைத்து என்னுடைய மருமகளாக பாக்கியாவை தேர்ந்து எடுத்தோம். ஆனால் தொடக்கத்தில் இருந்தே கோபிக்கு அது பிடிக்கவில்லை.
RVNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்ப கட்டணம் கிடையாது!
கோபி பாக்கியாவை பல கொடுமைகள் செய்தான். ஆனால் பாக்கியா எங்களுக்கு நல்ல மருமகளாக இருந்தால் என சொல்ல, பழனிக்கு பாக்கியாமீது நல்ல அனுதாபம் வருகிறது. அவர் பாக்கியாவை திருமணம் செய்து இனி சந்தோசமாக வைத்து கொள்ள வேண்டும் என நினைக்கிறார். இதற்கு குடும்பம் சம்மதிக்குமா? பாக்கியா சம்மதிப்பாரா? கோபி சொன்னது உண்மையாகிவிடுமா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.