வேகமாக பரவும் பறவை காய்ச்சல் – கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை!

0
வேகமாக பரவும் பறவை காய்ச்சல் - கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை!

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் வரும் 29 தேதி வரை கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல்:

தற்போது கோடை வெயிலின் தாக்கம் குறைந்து கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த பருவமழையின் காலத்தில் பல்வேறு காய்ச்சல் வருவது இயல்பான ஒன்றே. தற்போது கேரள மாநிலத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்தது. அதனை தொடர்ந்து தற்போது பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் ஆலப்புழாவில் இந்த நோய் கண்டறியப்பட்டது.

ICMR NIN வேலைவாய்ப்பு 2024 – 40+ காலிப்பணியிடங்கள்!!

மேலும் இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு கோழி பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான கோழிகள் திடீரென இறந்துள்ளன . இதனால் தற்போது கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கோட்டயம் பகுதிகளில் வரும் 29ம் தேதி வரை கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!