தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – அறிவியல் செய்முறை பயிற்சி! நவ.25 வரை விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 2022 – 2023 ம் கல்வியாண்டுக்கான 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தனித்தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
தனித்தேர்வர்கள்:
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அறிவிக்கப்பட்ட படி உரிய தேதியில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற தொடங்கியது. கொரோனா பரவலுக்கு முன்பு இருந்தது போல வகுப்புகள் நேரடி முறையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 1 – 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம் போல அனைத்து விதமான தேர்வுகளும் நடத்தப்பட்டது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன் தொடர்ச்சியாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன் படி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 2023 ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும். அதே போல 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் பொங்கலுக்கு அரசு வெளியிட போகும் ஜாக்பாட் அறிவிப்பு – மக்களுக்கு ஜாலி தான்!
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் பாடத்திற்கான செய்முறை பயிற்சியை பெற நவ .15ம் தேதி முதல் 25ம் வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான விண்ணப்பத்தினை www.dge.tn.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.