தமிழகத்தில் வரும் பொங்கலுக்கு அரசு வெளியிட போகும் ஜாக்பாட் அறிவிப்பு – மக்களுக்கு ஜாலி தான்!

0
தமிழகத்தில் வரும் பொங்கலுக்கு அரசு வெளியிட போகும் ஜாக்பாட் அறிவிப்பு – மக்களுக்கு ஜாலி தான்!
தமிழகத்தில் வரும் பொங்கலுக்கு அரசு வெளியிட போகும் ஜாக்பாட் அறிவிப்பு – மக்களுக்கு ஜாலி தான்!
தமிழகத்தில் வரும் பொங்கலுக்கு அரசு வெளியிட போகும் ஜாக்பாட் அறிவிப்பு – மக்களுக்கு ஜாலி தான்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது அரசு சிறப்பு அறிவிப்புகளை வெளியிடும். அந்த வகையில், 2023ம் ஆண்டிற்கான அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில் உழவர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை அன்று மக்கள் அனைவரும் வீடுகளில் பொங்கல் வைத்து, புது துணி உடுத்தி பண்டிகையை சிறப்பிக்க வேண்டும். ஏழை, எளிய மக்களும் பொங்கல் பண்டிகையை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் தமிழக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி, சேலை மற்றும் வீட்டு மளிகை மற்றும் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் 21 மளிகை பொருட்களுடன், ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேஷ்டி, சேலை அளிக்கப்பட்டது.

அரசுத் துறை காலிப்பணியிடங்கள் குறித்த தவறான தகவல்கள் – புதுச்சேரி அமைச்சுப் பணியாளர் சங்கம் புகார்!

Exams Daily Mobile App Download

ஆனால், அரசு அளித்த பொங்கல் பரிசு தொகுப்பில் இருந்த பொருட்கள் தரமற்றதாக இருந்ததாகவும், முறையாக வழங்கப்படவில்லை என்ற புகார்களும் எழுந்தது. இதனால், 2023ம் ஆண்டு பொங்கலுக்கான சிறப்பு அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகி விடும் என்றும், கடந்த ஆண்டினை போல் அல்லாமல் 2023ம் ஆண்டு பொங்கல் பரிசாக ரொக்கப்பணம் அளிக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!