சென்னை விமான பயணிகள் கவனத்திற்கு – கட்டணம் உயர்வு அறிவிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!
சென்னையில் இருந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் பயண கட்டணம் உயர்ந்துள்ளது. நிலவி வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் விமான கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
விமான கட்டணம்:
இந்தியாவில் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் படி வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. வெளிநாட்டு பயணிகளால் தான் தொற்று அதிகம் பரவுவது தெரிய வந்தது. இதனால் தொற்று தடுப்பு நடவடிக்கையாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்தியாவை தொடர்ந்து கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் பயணிகள் விமானத்தை ரத்து செய்தது. தொற்று குறையாத பட்சத்தில் விமானத்திற்கான தடையை தொடர்ந்து நீட்டித்தும் வந்தது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. அதனால் பாதிப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்ததால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பயணிகள் விமானங்கள் இயக்கப்பட்டது. தற்போது உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து வழக்கம் போல இயங்கி வரும் நிலையில் விமான பயணத்திற்கான கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து டெல்லி மும்பை, பெங்களூரு, மதுரை போன்ற நகரங்களுக்கு செல்லும் விமானங்களுக்கான பயண கட்டணம் உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 4000 மருத்துவ காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அறிவிப்பு!
அதன்படி சென்னையில் இருந்து மதுரை செல்ல விமான கட்டணம் ரூ. 5,500-ல் இருந்து 7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லிக்கு ரூ.9,500- ரூ.10,000, திருச்சிக்கு ரூ.3,500- ரூ.5000, கோவைக்கு ரூ.5,500- ரூ.6000, ஐதராபாத்துக்கு ரூ.6000-ரூ.6500, மும்பைக்கு ரூ.8600-ரூ.9000, பெங்களூருக்கு ரூ.5500-ரூ.6000 ஆக கட்டணம் அதிகரித்து உள்ளது. விமானத்தில் கட்டணம் உயர்ந்துள்ளதால் தற்போது மக்கள் ரயில் பயணத்தை தேர்தெடுத்து வருகின்றனர். மேலும் நடுத்தர மக்கள் விமான பயணத்தை தவிர்ப்பது அதிகமாகி வருகிறது.