மக்கள் பலர் ஏடிஎம் கார்டுகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இருக்கும் நல்ல விஷயங்களை பற்றி முழு விவரங்களை கீழே பார்க்கலாம்.
ஏடிஎம் கார்டு
மக்கள் பலர் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். ஆன்லைன் வசதி இல்லாதவர்களுக்கு ஏடிஎம் டெபிட் கார்டுகள் பயனுள்ளதாக இருக்கின்றன. இந்த கார்டு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் வைத்திருக்கின்றனர். இதன் மூலம் பணம் எடுப்பதற்கும், பணம் டெபாசிட் செய்வது மட்டுமே முடியும் என பலர் நினைக்கின்றனர்.
RBI வங்கி வேலைவாய்ப்பு 2024 – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!
ஆனால் அதை விட பல பலன்கள் இதில் இருக்கின்றன. அதாவது டெபிட் கார்டு மூலம் பணம் எடுக்கும் வசதி மட்டுமில்லாமல், இலவச காப்பீடும் கிடைக்கிறது. ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டவுடன், வாடிக்கையாளருக்கு விபத்துக் காப்பீடு அல்லது ஆயுள் காப்பீடு வசதியும் கிடைக்கும். உங்களிடம் உள்ள அட்டையின் மூலம் காப்பீடு தீர்மானிக்கப்படுகிறது. உங்களிடம் கிளாசிக் ஏடிஎம் கார்டு இருந்தால் ரூ. 1 லட்சம் இன்சூரன்ஸ், பிளாட்டினம் ஏடிஎம் கார்டு இருந்தால் ரூ. 2 லட்சம் இன்சூரன்ஸ், விசா கார்டு இருந்தால் ரூ. 1.5 முதல் ரூ. 2 லட்சம் வரை காப்பீடு தொகையைப் பெறலாம். மாஸ்டர்கார்டு வைத்திருப்பவர்கள் ரூ. 50 ஆயிரம் வரை காப்பீடு செய்யலாம்.