ரயில் டிக்கெட்களுக்கு இனி பணம் கொடுக்க தேவையில்லை – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

0
ரயில் டிக்கெட்களுக்கு இனி பணம் கொடுக்க தேவையில்லை - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

இந்திய ரயில்வே துறையானது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை எடுக்க இனி பணம் செலுத்த தேவையில்லை என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

பணமில்லா டிக்கெட்டுகள்:

இந்தியா முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. சாதாரண பெட்டி கடைகளில் தொடங்கி மிகப்பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் பயன்பாடு மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இத்தகைய டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஆனது அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களின் பயண டிக்கெட்டுகளை நேரடியாக சென்று வாங்குவதில் மட்டுமே பயன்படுத்தப்படாமல் இருந்தது. இருப்பினும் ரயில்களின் முன்பதிவு பெட்டிகளின் டிக்கெட்டுகளை ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலமாக பெறும் வழக்கம் நடைமுறையில் இருந்து கொண்டு தான் உள்ளது.

ATM கார்டில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? – இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

இதுபோன்ற முன்பதிவு இல்லாத பெட்டிகளின் டிக்கெட்டுகளை நேரில் சென்று வாங்குவதற்கான முறையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை கொண்டு வருமாறு பல பயனர்கள் ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு இணங்க ரயில்வே துறையானது இனி முன்பதிவு இல்லாத பெட்டிகளின் டிக்கெட்டுகளை பணம் செலுத்தி வாங்க தேவையில்லை. UPI மூலமான டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை மூலமாக செலுத்தி கொள்ளலாம் என அறிவித்துள்ளது. மேலும் இம்முறையானது வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!