தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்க்கு மாதம் ரூ.50,400/- ஊதியத்தில் திருக்கோயிலில் வேலை!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர், உதவி மின் பணியாளர், காவலர் மற்றும் பெருக்குபவர் ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு இந்து மதத்தைச்சார்ந்த தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் 11.05.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் |
பணியின் பெயர் | தட்டச்சர், உதவி மின் பணியாளர், காவலர் மற்றும் பெருக்குபவர் |
பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.05.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் காலிப்பணியிடங்கள்:
- தட்டச்சர் – 1 பணியிடம்
- உதவி மின் பணியாளர்- 1 பணியிடம்
- காவலர் – 4 பணியிடங்கள்
- பெருக்குபவர் – 1 பணியிடம்
கல்வி தகுதி:
- தட்டச்சர் – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- உதவி மின் பணியாளர்- அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/ மின் கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- காவலர் – தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- பெருக்குபவர் – தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ESIC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.60,000/- ஊதியம்..!
வயது வரம்பு:
அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி ஆலய ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-07-2023 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
TNHRCE சம்பள விவரம்:
- தட்டச்சர் – ரூ.18500-58600
- உதவி மின் பணியாளர்- ரூ.16600-52400
- காவலர் – ரூ.15900-50400
- பெருக்குபவர் – ரூ.15900-50400