ஐடியை தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாகும் மற்றொரு முக்கிய துறை – வெளியான பகீர் ரிப்போர்ட்!
கடந்த சில வருடங்களாக அதிகரித்து வந்த ஸ்மார்ட் போன்களின் மோகம் குறைந்து வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கைகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்மார்ட் போன்:
டெக்னாலஜியின் வளர்ச்சி அதிகரிப்பது ஆரோக்கியமாக தான் உள்ள போதிலும், மக்களின் அன்றாட செயல்களையே அவை பாதிக்கும் போது தான் பிரச்சினையே எழுகிறது. முன்னொரு காலத்தில் இணையம் என்பது ஆடம்பரமாகவும், வசதி படைத்தவர்களும் பயன்படுத்தும் நிலையில் இருந்தது. ஆனால் தற்போது ஸ்மார்ட் போன்களின் வருகையினால் உணவு கூட இல்லாமல் இருந்து விடும் இளம் வயதினர் இணையம் இல்லாமல் இருக்க முடிவதில்லை.
ரூ.500 முதலீட்டில் ரூ.40,000 அள்ளும் சிறந்த திட்டம் – நல்ல வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், பொருளாதார மந்த நிலை மற்றும் பணவீக்கம் காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த வரிசையில் ஸ்மார்ட் போன்களும் தற்போது இணைந்துள்ளது. அதாவது பணவீக்கத்தினால் மக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் மோகம் குறைந்துள்ளது என்று டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 2022-2023ம் நிதியாண்டின் 2ம் காலாண்டில் மக்களுக்கு 10% ஸ்மார்ட் போன்களின் மீதான மோகம் குறைந்து 4.3 கோடியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார மந்தநிலையால் ஐடி துறை பாதிக்கப்பட்டு பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.