அண்ணா பல்கலையில் 312 பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பணி குறித்து தொடர்பு கொள்ளும் இடைத்தரகர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம் என பல்கலை நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது.
பேராசிரியர் பணி:
அண்ணா பல்கலைக்கழத்தில் உள்ள பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறவு அது குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி அண்ணா பல்கலையின் 4 வளாகங்களில் காலியாக உள்ள 67 பேராசிரியர்கள், 139 உதவி பேராசிரியர்கள் மற்றும் 106 இணை பேராசிரியர்கள் உட்பட 312 பணியிடங்களை நிரப்ப அக்டோபர் 7ம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
100% பணியாளர்களுடன் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை – தமிழக அரசு அறிவிப்பு!!
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 21 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்ட நிலையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அடையாளம் தெரியாத அங்கீகாரம் இல்லாத நபர்கள் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர் தேர்வு பட்டியலில் இருப்பதாக கூறி, பணம் பறிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது குறித்து தற்போது அண்ணா பல்கலை விளக்கம் அளித்துள்ளது.
ஜனவரி 4ம் தேதி பள்ளிகள் திட்டமிட்டபடி திறப்பு – புதுச்சேரி கல்வித்துறை தகவல்!!
அதில், இது போன்று வரும் போலி அழைப்புகளை நம்ப வேண்டாம். இடைத்தரகர் செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விண்ணப்பித்தவர்கள் போலி அழைப்பு, தூண்டுதல் மற்றும் எந்த விதமான அதிகாரபூர்வமற்ற தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்