ஜனவரி 4ம் தேதி பள்ளிகள் திட்டமிட்டபடி திறப்பு – புதுச்சேரி கல்வித்துறை தகவல்!!
புதுச்சேரியில் வரும் ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல்:
கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கடந்த கல்வியாண்டில் இறுதித்தேர்வுகள் கூட நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி பாடம் கட்டாயம் – ஆசிரியர்கள் கோரிக்கை மனு!!
ஆன்லைன் வகுப்புகள்:
கொரோனா தொற்றின் காரணமாக நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே பாடங்கள் நடத்தப்படுகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது புதுச்சேரியில் மட்டும் சற்று குறைவாகவே இருந்தது.
பள்ளிகள் திறப்பு:
இதனால் புதுச்சேரியில் அக்டோபர் 8ம் தேதி முதல் பெற்றோர்கள் சம்மதத்துடன் 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு சந்தேகங்களை தீர்க்கும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜனவரி 4ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது.
மாணவர்கள், பெற்றோரின் சம்மதத்தோடு பள்ளிக்கு வரலாம். வருகைப்பதிவேடு கட்டாயமில்லை. மேலும், வரும் ஜனவரி 18 முதல் முழு நேர வகுப்புகள் நடைபெறும் என்று கடந்த 16ம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.
100% பணியாளர்களுடன் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை – தமிழக அரசு அறிவிப்பு!!
பெற்றோரின் சந்தேகம்:
பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்தாலும் மாநிலத்தில் இன்னும் பேருந்து சேவைகள் தொடங்கப்படவில்லை. பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் பற்றிய அறிவிப்புகள் கூட இன்னும் வரவில்லை. இதனால் மாணவர்கள் குறித்து பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர்:
புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அமைச்சர் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், “ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும். முதலில் அரை நாள் வகுப்புகள் நடைபெறும். விருப்பமுள்ள மாணவர்கள் வரலாம். வருகை பதிவேடு கிடையாது. மாணவர்களுக்கு தெர்மல் கருவி மூலம் உடல் நிலை பரிசோதிக்கப்படும். கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். கைகளை சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்தவும், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்புக்கு பின்னர் சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்