பொறியியல் செமஸ்டர் தேர்வுகளுக்கான வழிமுறைகள் – அண்ணா பல்கலை வெளியீடு!!!
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கல்லூரிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. ஊரடங்கு முறை அமலில் இருந்ததால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததால் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு டிசம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
அண்ணா பல்கலை பேராசிரியர்கள் பதவி உயர்வு – சிண்டிகேட் தீர்மானம்!!
கொரோனா பரவல்:
கொரோனா தொற்றின் தாக்கம் திடீரென்று தமிழகத்தில் அதிகரித்து வந்ததால் மீண்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு, முதுநிலை மாணவர்களுக்கு மற்றும் ஆய்வு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. அண்ணா பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைனில் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
வழிமுறைகள்:
ஏப்ரல் 15ம் தேதி முதல் 22ம் தேதி வரை தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்துவதாக அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் அனைத்தும் மார்ச் 31ம் தேதிக்குள் நேரடி முறையில் நடத்த வேண்டும். ஆய்வுகள் சமர்ப்பித்தல், viva – voce தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும். செய்முறை தேர்வுகளை நேரில் நடத்த முடியாத பட்சத்த்தில் முன் அனுமதி பெற்று பின்னர் நடத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Thanks