தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேர மும்முனை மின்சாரம் – முதல்வர் அறிவிப்பு!!

0
தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேர மும்முனை மின்சாரம் - முதல்வர் அறிவிப்பு!!
தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேர மும்முனை மின்சாரம் - முதல்வர் அறிவிப்பு!!
தமிழக விவசாயிகளுக்கு 24 மணிநேர மும்முனை மின்சாரம் – முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக பிரச்சாரத்தின் போது விவசாயிகளுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகள்:

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசு அலுவலர்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. பல முன்னணி அரசியல் கட்சியினரும் தேர்தலுக்கான பல நல திட்டங்களை அறிவித்து வருகின்றனர். அதனை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் வீதியில் இறங்கி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் நான்குனேரி தொகுதியில் நிற்கும் அதிமுக வேட்பாளர் தச்சை என்,கணேசராஜாவை ஆதரித்து பேசிய முதல்வர் கூறுகையில், “தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட உள்ளது. மேலும் மீண்டும் எங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் 6 கேஸ் சிலிண்டர் மற்றும் சோலார் அடுப்பு வழங்கப்படும்.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 7 ஆம் தேதி விடுமுறை – தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை!!

ஏழை மக்களுக்கு வழங்கப்படும் 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக அறிவிக்கப்படும். மாதம் தோறும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1500 வழங்கப்படும். ரேஷன் பொருள்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும். இரு சக்கர வாகனங்களுக்கான உரிம கட்டணம் அரசே செலுத்தும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் 10 ஆண்டுகளில் அதிமுக செய்த பல நல்ல திட்டங்களை பற்றி அவர் பேசினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!