அண்ணா பல்கலை பேராசிரியர்கள் பதவி உயர்வு – சிண்டிகேட் தீர்மானம்!!
அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பதவி உயர்வு தீர்மானத்தை முன்னதாக தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வு அறிக்கை:
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்களுக்கு இணை பேராசியராகவும், இணை பேராசியர்கள் பேராசிரியராகவும் பதவி உயர்வு வழங்குவது குறித்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு நடைமுறைகள் முடிந்த பின்னர் 2018ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானம் ஒன்றை முடிவு செய்தது.
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!
நீதிமன்ற வழக்கு:
பதவி உயர்வு வழங்குவதற்கு அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் புதிய தீர்மானம் ஒன்றை வெளியிட்டது. அதன்படி, பதவி உயர்வு பெறுவதற்கு கூடுதல் தகுதிகள் நியமிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. முன்னதாகவே நடந்து முடிந்த தேர்வுகளுக்கு புதிய தகுதியை நியாயம் செய்யும் தீர்மானம் பொருந்தாது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவு:
வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் அவர்கள், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் நிறைவேற்றியுள்ள கூடுதல் தகுதி தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், புதிய தீர்மானத்திற்கு முன்னதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பழைய நடைமுறையின் படியே பதவி உயர்வு வழங்கி 4 வாரங்களுக்குள் உத்தரவிட வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்