தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 7 ஆம் தேதி விடுமுறை – தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 7 ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இந்த பணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நான்கு கட்டமாக நடைபெற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதுவரை இரண்டு கட்டங்களாக தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடந்து முடிந்து உள்ளது.
TN Job “FB Group” Join Now
மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் முடிந்தவுடன் தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்நிலையில் காலை முதல் மாலை வரை தேர்தல் பணி நடைபெற உள்ளதால் ஏப்ரல் 7 ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனர் தேர்தல் ஆணையத்திடம் வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளவை,
10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி – மாநில அரசு வெளியீடு!!
“தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஆசிரியர்கள் ஏப்ரல் 5 ஆம் தேதி காலை தேர்தல் பணிகளுக்கான பணியாணையை பெற்று நேரடியாக வாக்கு மையத்திற்கு அனுப்பப்படுவார்கள். அதன் பின்னர் அவர்கள் அங்கேயே தங்கி பின்னர் மறுநாள் வாக்குப்பதிவில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். அதன் பின் அவர்கள் 50கிமீ தொலைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். எனவே பணி செய்யும் இடம் இருப்பிடம் போன்ற தொலைவுகளை கணக்கில் கொண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட வேண்டும்”, இவ்வாறு அதில் தெரிவித்தனர்.