10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி – மாநில அரசு வெளியீடு!!
ஹரியானா மாநில அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கி மே 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தொடங்கி மே 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. மத்திய மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நேற்று ஒருநாள் மட்டும் கொரோனாவால் 60,000க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு அதன் பின்னர் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் பிப்ரவரி மாதம் முதல் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன
தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கி மே 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தொடங்கி மே 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.