தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால், ஏப்ரல் 4 முதல் 6 ஆம் தேதி வரை மற்றும் மே 2 ஆம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான கடைகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. பல அரசியல் கட்சியினரும், தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என தேர்தல் களம் தீவிரமடைந்துள்ளது. பல முன்னணி அரசியல் கட்சியினரும் மக்களுக்கான நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கட்சி தலைவர்களும் கட்சியை வெற்றி பெற வைக்க வீதியில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பின் படி, “சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வாக்குப்பதிவு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று புதிய உச்சம் – பொதுமக்கள் அச்சம்!!
இதனால் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மற்றும் மே 2 ஆம் தேதி என 4 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மதுபான கடைகள் மட்டுமில்லாமல் அவற்றுடன் இணைந்த மதுபான கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகள் மூடப்பட உள்ளன. ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் காலை 10 மணியில் இருந்து ஏப்ரல் 6 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட உள்ளது”, என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.