இந்தியாவில் கொரோனா தொற்று புதிய உச்சம் – பொதுமக்கள் அச்சம்!!

0
இந்தியாவில் கொரோனா தொற்று புதிய உச்சம் - பொதுமக்கள் அச்சம்!!
இந்தியாவில் கொரோனா தொற்று புதிய உச்சம் - பொதுமக்கள் அச்சம்!!
இந்தியாவில் கொரோனா தொற்று புதிய உச்சம் – பொதுமக்கள் அச்சம்!!

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 62,258 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம், கேரளா, மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் கொரோனா தாக்கம் 80 சதவிகிதத்திற்கு அதிகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 35000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி – ஜூன் மாதம் செலுத்த முடிவு!!

கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 910 ஆக பதிவாகியுள்ளது. அதில் ஒரு கோடியே 12 லட்சத்து 95 ஆயிரத்து 23 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது 4 லட்சத்து 52 ஆயிரத்து 647 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 240 பேர் உயிரிழந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!