தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு அறிக்கை:

27.03.2021: தமிழகத்தில் ‌ திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடியுடன் ‌கூடிய மிதமான மழையும்‌, ராமநாதபுரம்‌ மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌ என்று கூறப்பட்டுள்ளது.

ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 15 கடைசி நாள்!!

28.03.2021: தமிழகத்தில்‌ திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும் புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌. 29.03.2021 முதல்‌ 31.03.2021 வரை தமிழகம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக தெளிவாக காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:

ஏப்ரல்‌ 2 முதல்‌ தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்‌கி வீச வாய்ப்பு உள்ளதால்‌ சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருவள்ளூர்‌, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கடலூர்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர்‌, அரியலூர்‌, மயிலாடுதுறை மாவட்டங்கள்‌ மற்றும் புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்‌சியஸ்‌ வரை உயரக்கூடும்‌.

கடந்த 24 மணிநேரத்தை பொறுத்த வரையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, சாத்தான்குளம் பகுதிகளில் தலா 1 சென்டிமீட்டர் அளவு மழை பெய்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

27.03.2021: தென்மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.
28.03.2021: தெற்கு வங்கக்கடலின்‌ மத்திய பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40- 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.
29.03.2021: தென்‌ கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய அந்தமான்‌ கடல் பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!