அண்ணா பல்கலையில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் கவனத்திற்கு – மீண்டும் வாய்ப்பு!!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்குவது வழக்கமாகும்.அந்த வகையில் தற்போது 2001- 2002 ஆம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் சிறப்பு வாய்ப்பு வழங்க உள்ளதாக பல்கலை அறிவித்துள்ளது.
அரியர் தேர்வு
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் அரியர் வைத்திருந்தால் மீண்டும் தேர்வு எழுதுவதற்கு அவ்வப்போது சிறப்பு வாய்ப்புகள் வழங்கப்படுவது உண்டு. அந்த வகையில் கடந்த ஆண்டு 2001-02 கல்வியாண்டு 3-வது செமஸ்டர் முதல் தற்போது வரை அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு அரியர் மாணவர்கள் தேர்வை எழுதினார்கள். இதையடுத்து தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பை வழங்க உள்ளதாக பல்கலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – ஊரடங்கு அமல்… 31,354 பேர் பாதிப்பு – அச்சத்தில் மக்கள்!
Exams Daily Mobile App Download
அதன்படி 2001-02ம் கல்வியாண்டின் 3வது செமஸ்டரில் இருந்தும், 2002-03ம் கல்வியாண்டின் முதல் செமஸ்டரில் இருந்தும் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கான நடைமுறை, தேர்வு மையம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு தேர்வு கட்டணத்துடன் ரூ.5000 கூடுதலாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் டிசம்பர் 3 என்பது குறிப்பிடத்தக்கது.