மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – ஊரடங்கு அமல்… 31,354 பேர் பாதிப்பு – அச்சத்தில் மக்கள்!
சீனாவின் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால் அந்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் ஊரடங்கும் அமலில் உள்ளது.
கொரோனா:
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கடந்த வருடங்களில் பாதிப்புகள் உச்சத்தை அடைந்தது. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்தனர். இதில் அவல நிலை என்னவெனில் மருத்துவமனைகள் நிரம்பி நோயாளிகளை அனுமதிக்க இடமில்லாமல் மருத்துவர்கள் திண்டாடினர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மற்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பூசிகளும் மக்களுக்குசெலுத்தப்பட்டது. இதன் விளைவாக பாதிப்பு எண்ணிக்கை சரிவடைந்து மக்களும் கொரோனாவில் இருந்து மீள ஆரம்பித்தனர். ஒரு வழியாக கொரோனா வைரஸ் தொற்று ஒழிந்து விட்டது என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது சீனாவில் ஒரு நாளில் மட்டும் சுமார் 31,354 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கை விதித்துள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நாட்டில் மக்கள் பயணம் மேற்கொள்ள கடப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.