ஆல்யா மனசா ரசிகர்களுக்கு ‘ராஜா ராணி’ சஞ்சீவ் விடுத்த வேண்டுகோள் – வைரலாகும் பதிவு!
விஜய் டிவி ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் மக்களுக்கு பரீட்சயமான நடிகர் சஞ்சீவ் தற்போது, தனக்கும் தனது மனைவி ஆலியா மானஸாவுக்காகவும் உங்களது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார்.
நடிகர் சஞ்சீவ் விடுத்த வேண்டுகோள்:
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருந்த முக்கியமான சீரியல் ‘ராஜா ராணி’. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் சுமார் 875 எபிசோடுகளாக வெளியாகி வந்த இந்த ‘ராஜா ராணி’ சீரியல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையுள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கக்கூடியதாக அமைந்திருந்தது. இத்தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான திரைப்பட நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகை ஆலியா மானஸாவுக்கு ரசிகர்கள் எக்கச்சக்கமான வரவேற்புகளை கொடுத்திருந்தனர்.
ராதிகா கோபி திருமணம் பற்றி சொன்ன மயூரா, அதிர்ச்சியில் ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
குறிப்பாக ‘ராஜா ராணி’ சீரியலின் கார்த்திக், செம்பா ஜோடிக்கு தனி ஃபேன் பேஸ் உருவானது. இப்படி சீரியலில் ஒன்றாக ரொமான்ஸ் செய்து வந்த நடிகர் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானஸா இருவரும் நாளடைவில் காதலர்களாக மாறி, கடந்த 2019ம் ஆண்டில் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது ஐலா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இப்போது ‘ராஜா ராணி’ சீரியலின் ரியல் ஜோடி வெவ்வேறு சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறது.
இதனிடைய சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகர் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானஸா இருவரும் தங்களது குழந்தை ஐலாவுடன் சேர்ந்து பல்வேறு வீடியோக்களை எடுத்து அதனை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். வழக்கமாக இந்த வீடியோக்கள் அனைத்தும் வைரலாவது உண்டு. இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் தனது ரசிகர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.
கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி, பாரதியை வரவைக்க வெண்பாவின் புதிய திட்டம் – இன்றைய எபிசோட்!
அதாவது ஒரு சமூக வலைதள பக்கம், நடிகர் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானஸாவின் புகைப்படத்தை வைத்து வோட்டிங் நடத்தியுள்ளது. இதில் ரசிகர்கள் சிலர் தங்களது வாக்குகளை கொடுத்துள்ளனர். இதனை தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகர் சஞ்சீவ், ‘எனக்காகவும், ஆலியாவுக்காகவும் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.