கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி, பாரதியை வரவைக்க வெண்பாவின் புதிய திட்டம் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி தன்னுடைய பொருள்களை கண்ணம்மா வீட்டில் இருந்து எடுக்க வர வீட்டிற்குள் செல்ல மனம் வராமல் தவிக்கிறார். பின் வெண்பா பாரதியை வர வைக்க புதிய திட்டம் ஒன்றை போடுகிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மா வீட்டு வாசலில் நிற்க அவருடைய பொருள்கள் வேண்டும் என நினைக்கிறார். ஆனால் உள்ளே போக மனமில்லாமல் நிற்க அப்போது குமார் அங்கே வருகிறார். அவர் பாரதியிடம் நீங்க நடந்து கொள்வது எல்லாம் சரி தான என கேட்கிறார். இத்தனை நாள் இருந்தீங்க கண்ணம்மா எப்படி உழைத்து சம்பாரித்து வாழுகிறார் என்பதை பார்த்தும் உங்களுக்கு புரியவில்லையா, ஒரு ஆம்பளை எனக்கே இவ்வளவு வேலை பார்த்தால் உடம்பு வலிக்கிறது ஆனால் கண்ணம்மாவிற்கு வலிக்காத, ஒரு அண்ணனாக பேசுகிறேன் நீங்க செய்வது தவறு என சொல்ல, பாரதி என்னுடைய பொருட்களை எடுத்து தர முடியுமா என கேட்கிறார்.
ஆனால் குமார் எடுத்து தர முடியாது என சொல்ல, இதை எல்லாம் கண்ணம்மா மாடியில் இருந்து பார்க்கிறார். மறுப்பக்கம் வெண்பா பாரதி கண்ணம்மா பிரிந்ததை நினைத்து சந்தோசமாக இருக்கிறார். எப்படியாவது பாரதியை வர வைக்க வேண்டும் என திட்டமிடுகிறார். அப்போது சாந்தி வர நான் கண்ணம்மா மீது பாரதிக்கு சந்தேகத்தை அடி மனதில் பதித்து வைத்து இருக்கிறேன். அதை மாற்றவே முடியாது என சிரிக்கிறார். பாரதி இப்போது மன உளைச்சலில் இருக்க இது தான் சரியான சமயம் என வெண்பா திட்டமிடுகிறார்.
பின் கண்ணம்மா வடிவு பேசிக் கொண்டிருக்கிறார்கள், அந்த ஆளு இப்படி இருக்கிறார். இந்த உலகத்தில் எல்லாத்துக்கும் மருந்து இருக்கிறது. ஆனால் சந்தேகத்திற்கு மருந்தே இல்லை என வடிவு சொல்கிறார். பின் கோர்ட் உத்தரவின் படி அவர் இங்கே தான இருக்க வேண்டும் என சொல்ல, அவர் இனிமேல் வருவார் என எனக்கு நம்பிக்கை இல்லை என்று கண்ணம்மா சொல்கிறார். இதை பற்றி நீதிபதியிடம் சொல்ல வேண்டாம் என சொல்ல, இப்படியே விட கூடாது என வடிவு சொல்கிறார். ஆனால் எனக்கு சுயமரியாதை வேண்டும் என கண்ணம்மா கோவமாக பேசுகிறார்.
பிப்ரவரி மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
பாரதி மருத்துவமனைகளில் தேவையான ஆவணங்கள் அனைத்தும் கண்ணம்மா வீட்டில் இருக்கிறது. எப்படி எடுப்பது என தெரியாமல் இருக்க வெண்பா போன் செய்கிறார். ஆனால் பாரதி வெண்பாவிடம் கோவமாக பேசி போனை வைக்க சொல்ல வெண்பா நான் சாக போகிறேன் என சொல்லி போனை வைக்கிறார். பின் சாந்தியிடம் நான் சாக போவதாக பாரதிக்கு போன் செய்து சொல்லு என சொல்ல சாந்தி நடிக்கிறார். உடனே பாரதி நான் கிளம்பி வருகிறேன் என சொல்கிறார். அதை கேட்டு வெண்பா சந்தோஷத்தில் இருக்கிறார்.