மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா, முல்லைக்கு ஆறுதல் சொல்லும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
மீனாவிடம் மன்னிப்பு கேட்க ஐஸ்வர்யா, முல்லைக்கு ஆறுதல் சொல்லும் ஜீவா - இன்றைய
மீனாவிடம் மன்னிப்பு கேட்க ஐஸ்வர்யா, முல்லைக்கு ஆறுதல் சொல்லும் ஜீவா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா, முல்லைக்கு ஆறுதல் சொல்லும் ஜீவா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவை ஐஸ்வர்யா சாப்பிட வர சொல்ல, ஆனால் மீனா மன்னிப்பு கேட்டால் தான் சாப்பிடுவேன் என சொல்கிறார். அப்போது ஐஸ்வர்யா சாரி கேட்க எல்லாம் சரியாகிவிடுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா சாப்பிடமாட்டேன் என சொல்ல ஐஸ்வர்யா மற்றும் தனம் வந்து சாப்பிட வர சொல்கிறார்கள். மீனா ரொம்ப நல்லவள் மாதிரி பேசாதே என சொல்ல, ஐஸ்வர்யா நீங்க பேசியதால் தான் நானும் பேசினேன் என சொல்கிறார். அப்போது மீனா சத்தமாக பேச தனம் வெளியே ஆம்பளைங்க சாப்பிட்டுக் கொண்டு இருக்கார்கள் அமைதியாக பேசுங்கள் என சொல்கிறார். கடைசியாக ஐஸ்வர்யா என்னை மன்னித்துவிடுங்கள் இப்போது சாப்பிட வாருங்கள் என சொல்ல, மீனா சமாதானம் அடைந்து சாப்பிட வருகிறார்.

மூர்த்தி தலைவலி சரியாகிவிட்டதா என கேட்க, யாருக்கு தலைவலி என மீனா கேட்கிறார். உனக்கு தான் என சொல்ல ஜீவா அதெல்லாம் சரியாகி இருக்கும் என சொல்லி சமாளிக்கிறார். பின் கண்ணனிற்கு கூடுதல் அப்பளம் வைத்து கதிர் சாப்பிட சொல்கிறார். பின் தனம் முல்லையை நீ உன் அம்மா வீட்டில் இன்று தங்கிவிடுவாய் என நினைத்தேன் ஆனால் அதற்குள் வந்துவிட்டாய் என கேட்கிறார். எனக்கு இங்கே இருப்பது தான் மிகவும் பிடித்துள்ளது என முல்லை சொல்ல, எனக்கும் அப்படி தான் இருக்கிறது என தனம் சொல்கிறார்.

அப்போது மீனா வர முல்லையிடம் குழந்தை பற்றி பேசுகிறார். எனக்கு தெரிந்த நிறைய பேருக்கு காரணம் இல்லாமல் தாமதமாக குழந்தை பிறந்துள்ளது. அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நீங்க வருத்தப்படாமல் இருங்க, குழந்தை தாமதமாக பிறந்தால் தான் நல்ல காதலிக்கலாம் அக்காவை பார்த்தீங்களா இத்தனை ஆண்டு காதலித்து தற்போது குழந்தை பெற்றுக் கொண்டுள்ளார் என சொல்ல அனைவரும் சிரித்து சந்தோசமாக இருக்கின்றனர்.

கண்ணம்மா வீட்டிற்கு சென்ற பாரதி, பாரதியை வரவைக்க வெண்பாவின் புதிய திட்டம் – இன்றைய எபிசோட்!

பின் மீனா கயலை கொஞ்சிக் கொண்டிருக்கிறார். அம்மா மாதிரி தைரியமாக நீ இருக்க வேண்டும் என சொல்லி கொஞ்சிக் கொண்டிருக்க ஜீவா வருகிறார். அவரிடம் மீனா முல்லை கதிர் மருத்துவமனைக்கு சென்றது பற்றி கேட்கிறார். மீனா அவர்கள் குழந்தை இல்லாமல் வருத்தப்படுவதாக சொல்ல,அதான் அவன் கடையில் வருத்தமாக இருந்தானா என ஜீவா கேட்கிறார். பின் கதிர் முல்லை பின் பக்கம் மருத்துவ முடிவுகள் எப்படி வரும் என நினைத்து பேசிக் கொண்டிருக்க அப்போது ஜீவா வந்து இருவருக்கும் ஆறுதல் சொல்கிறார். குழந்தை பிறக்க தாமதம் ஆனால் இரட்டை குழந்தை கூட பிறக்கும் என சொல்ல அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!