பத்ம விருதுகள் 2022 அறிவிப்பு – தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது! முழு விபரம் இதோ!
இந்தியாவில் கலை, இலக்கியம் மற்றும் கல்வி என சாதனை படைத்தவர்களுக்காக வழங்கப்படும் பத்ம விருதுகள் தமிழகத்தை சேர்ந்த சௌகார்ஜானகி உட்பட 7 பேருக்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
பத்மஸ்ரீ விருதுகள்:
இந்தியாவில் உள்ள சில துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் அரசியல், சமூகம், நிர்வாகம், கலை (இசை, நடனம், சிற்பம், ஓவியம், சினிமா), கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் திறமையானவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்தகைய பத்ம விருதுகளில் மிகவும் உயரிய விருது பாரத ரத்னா விருது ஆகும்.
அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள். இத்தகைய விருதுகள் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருத்தொற்று காரணமாக ஆண்டின் இறுதியில் வழங்கப்பட்டது. அவ்வாறு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பத்ம விருதுகள் தமிழகத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன், சாலமன் பாப்பையா அவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
73வது குடியரசு தினம் – சென்னை மெரினாவில் தமிழக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு!
அதன்படி இந்தியாவின் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட பலருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இலக்கியம் மற்றும் கல்விக்காக சிற்பி பாலசுப்பிரமணியன், கலைக்காக பல்லேஷ் பஜண்டரி, சமூக பணிக்காக எஸ்.தாமோதரன், கலைக்காக சௌகார் ஜானகி, கலைக்காக முதுகண்ணம்மாள், கலைக்காக ஏ.கே.சி நடராஜன் மற்றும் மருத்துவத்திற்காக வீராசாமி சேஷையா ஆகியோருக்கு பத்மஸ்ரீவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.