ராதிகா கோபி திருமணம் பற்றி சொன்ன மயூரா, அதிர்ச்சியில் ராமமூர்த்தி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபியின் மாற்றத்தை பற்றி கேள்வி கேட்கிறார். ஆனால் கோபி பாக்கியாவை அவமானப்படுத்துவது போல பேசுகிறார். பின் ராமமூர்த்தி மயூரா மூலம் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதை தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வது பற்றி நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா அவரை பார்த்து என்னிடம் எதாவது மறைக்கிறீர்களா என கேட்கிறார். நீ எதை பற்றி கேட்கிறாய் என கோபி கேட்க, உங்களது நடிவடிக்கை எல்லாம் சரியாக இல்லை நீங்க எதையோ என்னிடம் மறைக்கிறீர்கள் என பாக்கியா சொல்கிறார். நீ சொல்வது புரியவில்லை என கோபி சொல்ல, இனியாவிடம் வெளி ஊர் போனால் என்ன செய்வாய் என்று ஏன் கேட்டீர்கள் அதற்கு என்ன அர்த்தம் என பாக்கியா கேட்கிறார்,
அதெல்லாம் சும்மா பேச கேட்டேன் என கோபி சொல்ல, நீங்க ஒளித்து வைத்த புகைப்படத்தை நான் எடுத்துவிட்டேன் என சொல்கிறார். உடனே கோபி இன்னும் அந்த போட்டோ பிரச்சனை முடியவில்லையா என கேட்டு சத்தம் போடுகிறார். பாக்கியாவை அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். பின் ராமமூர்த்தி அந்த போட்டோவை எடுத்து வந்து கொடுக்க சொல்ல, பாக்கியா கொண்டு வந்து கொடுக்கிறார், எழிலிடம் சொல்லி புகைப்படங்களை மாட்ட சொல்ல இனியா ராதிகா வீட்டிற்கு போவதாக சொல்கிறார். எழில் நான் விட்டுவிட்டு வருகிறேன் என கிளம்ப, அங்கே மயூரா கிளம்பிக் கொண்டு இருக்கிறார்.
இனியாவும் எழிலும் ராதிகா வீட்டிற்கு போக அங்கே சிறிது நேரம் பேசிவிட்டு மயூராவை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். ராமமூர்த்தி புகைப்படங்களை துடைத்து கொண்டிருக்க, மயூரா வருவதை பார்த்து அதை மறைத்து வைக்கிறார். பின் மயூராவை பார்த்து பாக்கியாவும் சந்தோசப்பட ராமமூர்த்தி மயூராவிடம் உன் அம்மா எங்கே என கேட்கிறார். அவர் வீட்டில் இருக்கிறார், என் பாட்டியும் வீட்டில் தான் இருக்காங்க, இருவருக்கும் எப்போதும் சண்டை தான் என சொல்ல, எதற்கு சண்டை என கேட்கிறார்.
எங்க வீட்டில் ஒரு அங்கிள் வருவார்கள் அதனால் சண்டை என சொல்ல அவன் இன்னும் வருகிறானா ராமமூர்த்தி கோபப்படுகிறார். இனியா அக்கா என் அம்மா கல்யாணம் செய்ய போகிறார். நான் என் அம்மா கல்யாணத்தை பார்க்க போகிறேன் என சொல்ல, யாரை கல்யாணம் செய்ய போகிறார் என ராமமூர்த்தி கேட்கிறார். என் அம்மா நண்பர் கோபியை தான் என சொல்ல, ராமமூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். அவருக்கு என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறது.
13 நிமிட எபிசோட் ஜவ்வு மிட்டாய் போல் இறுதியாக உள்ளது, எப்படா நிறுத்த போறான் என்று இருக்கிறது ரொம்ப அருவை, அது எதுக்காக தூக்கலாக மியூசிக் வசனமே காதில் விழுவதில்லை கோரம் கொதிக்கிறது. என்ன ஒரு அறுவை.