ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்.. மினிமம் ரீசார்ஜ் திட்டம் 57 சதவிகிதம் அதிகரிப்பு – வெளியான அப்டேட்!
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது குறைவான ரீசார்ஜ் திட்டத்தை, 57 சதவிகிதம் அதிகரித்து, 2 நகரங்களில் அதனை அமல்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏர்டெல் நிறுவனம்:
பாரதி ஏர்டெல் நிறுவனம் பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையான தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கிறது. இதில் பல ரீசார்ஜ் திட்டங்கள் உள்ள நிலையில் அனைத்து விலையிலும் மக்களுக்கு பயனுள்ள ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது 28 நாள் மொபைல் போன் சேவை திட்டத்திற்கான குறைந்தபட்ச ரீசார்ஜ் விலையை சுமார் 57 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த விலை அதிகரிப்பு ஹரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் அமலாகி இருக்கிறது. அதன் படி குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் ரூ. 155 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமான ரூ.99யை ஏர்டெல் நிறுவனம் நிறுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வினாடிக்கு ரூ.2.5 பைசா என்ற விகிதத்தில் 200 MB டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்கி வந்தது. ஆனால் தற்போது ஹரியானா மற்றும் ஒடிசாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ரூ.155 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் வழங்கி வருகிறது.
தமிழகத்தில் 24.11.2022 மின்தடை செய்யப்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
தற்போது இரு நகரங்களில் மட்டும் இந்த புது திட்டத்தை தொடங்கி இருக்கிறது. இதன் வளர்ச்சி மற்றும் மக்களின் ஆதரவின் படி இந்தியா முழுவதும் இதே திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி ஒருவர் வெறும் எஸ்எம்எஸ் சேவையை பெற கூட ரூ. 155 ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.