பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்.. களமிறங்கும் AI கேமரா.. மாநகராட்சி முடிவு!!
சென்னையில் தற்போது சிங்கார சென்னை 2.0 திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது போக, இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இதைத்தொடர்ந்து சென்னையில் AI கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை.. வெளியான முக்கிய தகவல்!!
அதாவது சாலை விதிகளை மீறுவது, பொது இடங்களில் குப்பை கொட்டுவது, மாடுகளை சாலைகளில் திரிய விடுவது போன்றவற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருவரின் முகத்தை வைத்தே, அவரது வோட்டர் ஐடி அல்லது ஆதார் கார்டு விவரங்களை இந்த AI கேமராக்கள் அனுப்பிவிடுமாம். இதனால் மேற்கூறிய செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.விதிகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் இருந்து , இதுவரை ரூ.18 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


























