JEE முதன்மைத் தேர்வுக்கான அனுமதி நுழைவுச்சீட்டு – இணையதளத்தில் வெளியீடு! மாணவர்கள் கவனத்திற்கு!
இந்தியாவில் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர நடத்தப்படும் JEE தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்வு வருகிற 23ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் இத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் கவனத்திற்கு
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெற்று தேர்வு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்காக தயார் நிலையில் உள்ளனர். இதையடுத்து ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர JEE எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி JEE முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக தேசிய தேர்வு முகமை சார்பாக நடத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இதில் முதல்நிலைத் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெற்று வந்தது. ஆனால் நடப்பு ஆண்டிலிருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி இந்தாண்டுக்கான முதல்கட்ட தேர்வு ஏப்ரல் 21 முதல் மே 4ஆம் தேதி வரையும், 2ஆம் கட்ட தேர்வு மே 24 முதல் 29ஆம் தேதி வரையும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல மாநிலங்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடையாமல் இருந்தது. அதனால் இந்நேரத்தில் தங்களால் கலந்து கொள்ள முடியாது என்று தேர்வர்கள் இத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஜியோ பயனர்கள் கவனத்திற்கு – 252 ஜிபி வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டம்! முழு விவரங்கள் இதோ!
இதனை ஏற்ற கொண்ட தேர்வு முகமை, இத்தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளி வைத்தது. அதன்படி தற்போது ஜூன் 23,24,25,26,27,28, 29 ஆகிய 7 நாட்களில் முதல் கட்ட தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக இத்தேர்வு ஜூன் 20ம் தேதி அன்று நடைபெற இருந்த நிலையில் தற்போது அக்னிபாத் போராட்டம் காரணமாக ஜூன் 23ம் தேதி அன்று தொடங்கப்பட உள்ளது. மேலும் இத்தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.